மத்திய அரசு தடையை கண்டித்து நாளை மறுநாள் திமுக போராட்டம்…

MK Stalin
மாட்டு இறைச்சியை தடையை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது என்பதை நாம் அறிவோம் இதனையொட்டி மே 31ஆம் தேதி அன்று தி.மு.க.வினர் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர்.

அதாவது இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக் கூடங்களுக்கு அழைத்து செல்லப்படுவற்கு மத்திய அரசு நாடு முழுவதும் தடை விதித்தது. இந்நிலையில் இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக, சென்னையில் மே 31ம் தேதி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூறியுள்ளது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற தலைபில் திமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, புதுவை உள்ளிட்டவை இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு மௌனம் காப்பது ஏன் என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Response