விரைவில் அறிமுகம் 108 ஆம்புலன்ஸ் சேவை ஆப்…

ambulance
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள 108-ன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று கலந்து கொண்டார்.

இந்தநிகழ்ச்சியில் அவர் பேசும் போது, ” மாதத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்பெற்று வருகின்றனர். மேலும், 108 சேவை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நடைபெற்ற இடத்தை தெரிவிக்கும் போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு பிரத்தியேகமாக கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

இச்சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விரைவில் துவக்கி வைக்கபடவுள்ளது. இந்த கைப்பேசி செயலி செயல்படுத்தப்பட்ட பின் 108 சேவையை தொடர்பு கொள்ளும் பொழுது தொடர்புகொள்பவர் இருக்கும் இடத்தின் முழு முகவரியும் சேவை மையத்திற்கு தெரிய வரும்.

இதனால் சேவை மையத்தில் சரியான முகவரியை கேட்டு கால தாமதம் ஆவது தவிர்க்கப்படும். இரவு பகல் பாராது, பேரிடர் காலங்களிலும் இந்த அருஞ்சேவை ஆற்றிவரும் பைலட்களை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 26ஆம் நாள் பைலட்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக சேவையாற்றிய பைலட்களுக்கு நற்சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த பாராட்டு அவர்களை இந்த சேவையை மேன்மேலும் சிறப்புற செய்ய ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Response