புதுமுகங்கள் ஆடவிருக்கும் “கில்லி பம்பரம் கோலி”…

killi
என்னதுடா தலைப்பு பார்த்து குழப்பத்துடன் பாக்குறிங்களா. அது என்னனா நம்ம கலாச்சாரம் மிக்க விளயாட்டு கில்லி, பம்பரம், கோலி இதை பத்தி பேச வரவிருக்கு படம். இப்படம் வர ஜூன் வெளி வரவிருக்கு.

ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் சார்பாக D.மனோஹரன் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் கில்லி பம்பரம் கோலி. வாழ்க்கைக்கு உதவாது என்று பெரியோர்களால் ஒதுக்கப்பட்ட நல்ல விஷயங்கள் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் நமக்கு கை கொடுக்கும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது.

புதுமுகங்களான தமிழ், பிரசாத், நரேஷ் என்று ஒன்றுக்கு மூன்று பேர் கதையின் நாயகர்களாகவும் தீப்தி ஷெட்டி என்ற அழகிய புதுமுகம் கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் பெயருக்குக் கூட காதல் என்பது கிடையாது. அந்த அளவுக்கு நட்பையும் வாழ்க்கைக்காக நடக்கும் போராட்டத்தையும் மட்டுமே மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகிறார் சந்தோஷ்குமார்.

மேலும் நாககிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் P.சாய்சுரேஷின் படத்தொகுப்பும் தினாவின் நடன அமைப்பும் இந்த படத்தின் வெற்றிக்கு துணை சேர்த்துள்ளதாக கூறும் இயக்குனர் பணம் கொடுத்து தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் நிச்சயம் அதை உறுதி செய்வார்கள் என்றும் போஸ்ட் புரொடக்‌ஷனின் போதே அந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் சந்தோஷப்படுகிறார் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் D.மனோஹரன்.

Leave a Response