ஜூன் 9 முதல் உலகமெங்கும் “சத்ரியன்”…

satriyan
⁠⁠⁠⁠⁠ஆர்.பிரபாகரன் இயக்கி, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வர விருக்கும் படம்தான் சத்ரியன். இப்படம் திருச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கதாநாயகனாக விக்ரம் பிரபுவும், நாயகியாக மஞ்சிமா மோகனும் நடித்துள்ளனர். இவர்களுடன் கவினும் ஐஸ்வர்யாவும் மற்றுமொரு நாயகன், நாயகியாக இப்படத்தில் சேர்ந்துள்ளனர்.

இப்படத்தை தணிக்கை செய்த தணிக்கைக் குழுவினர், அனைவரும் பார்க்க கூடிய வகையில் “யூ” சான்றிதழை வழங்கியுள்ளது. இப்படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா மேற்கொள்ள, ஒளிப்பதிவை விஜயன் செய்துள்ளார். முன்னதாக வரவேண்டிய இப்படம் சிறு சிறு பிரச்சனைகளால் சற்று தள்ளி போனது. முதலில் இப்படத்திற்கு “மூடி சூடா மன்னன்” என்று பெயரிடப்பட்டது பின்னர் “சத்ரியன்” என்று பெயரை மாற்றியுள்ளனர். இப்படம் இம்மாதம் 9ஆம் தேதியன்று திரைக்கு வெளிவரவிருக்கிறது.

Leave a Response