6 லட்சம் பேர் விண்ணப்பித்த காவலர் பணிக்கு இன்று எழுத்து தேர்வு…

tamilnaadu police
தமிழக காவல்துறையில், இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரர் என 15,664 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த பணிகளுக்குக்கான எழுத்துத் தேர்வை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்துகிறது. 32 மாவட்டங்களில் 410 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

இன்று காலை 10 மணிக்குத் துவங்கும் இந்த தேர்வு 11.20 மணிக்கு தேர்வு முடிவடைகிறது. சென்னையில் 56 மையங்களில் நடைபெற உள்ள தேர்வுக்காக 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Leave a Response