பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்ணுக்கு குவியும் ஆதாரவு…

kerala
கேரளாவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சாமியாரின் இந்த பாலியல் தொல்லைக்கு, அந்த இளம்பெண்ணின் தாயும் உடந்தையாக இருந்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக பொங்கி எழுந்த அந்த இளம்பெண்ணுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. கேரள முதல்வர் பிரணாயி விஜயன், இந்த செயலில் ஈடுபட்ட இளம்பெண்ணிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் அந்த பெண் குறித்த ஸ்டேட்டஸ்கள் அதிக அளவு பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு, இது போன்ற தண்டனைகள் அளிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற ரீதியிலும் கருத்துகள் எழுந்து வருகின்றன.

Leave a Response