குத்துப்பாட்டு நாயகி “இட்லி” படத்தில் கதாநாயகி

asmitha
பொதுவாவே நம்ம சினிமா துறையில் ஒரு பொண்ணு குத்துப்பாட்டுக்கு ஆடிட்டாங்கனா அவ்ளோதா அவங்கள கடைசி வர குத்துப்பாட்டுக்குதா ஆடுவாங்க இப்படி சொல்லி சொல்லி அது உண்மையாச்சு. அதை உடைத்தெறியும் விதமாக இங்க ஒருத்தங்க பண்ணி இருக்காங்க.

அதாவது சலீம் படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்ற குத்து பாடலுக்கு நடனமாடிய அஷ்மிதா ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் ஹரோயினாக வாய்ப்பு கிடைக்காமல் கேரக்டர் நடிகை, குத்தாட்ட நடிகை என்று வாய்ப்புகளை மாற்றி கொள்கின்றனர். இந்த வரிசையில் ரிஷா, சுஜா வாருணி, கேரக்டர் நடிககைளாக மாறியுள்ளனர். இந்நிலையில் அஷ்மிதா தற்போது இட்லி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இது பற்றி கூறிய அஷ்மிதா, காதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்தேன் என்றும் ஆனால் சூழ்நிலையால் குத்துபாட்டுக்கு ஆட வந்தேன். அதில் மஸ்காரா பாடல் என்னை பிரபலபடுத்தியது. இட்லி படம் சமூக வலைதளங்களில் சிக்கி கொள்ளும் பெண்கள் பற்றிய படம் என்று அஷ்மிதா தெரிவித்தார். ஹீரோயின் ஆகிவிட்டதால் குத்துப்பாடலில் ஆடுவதை தவிர்க்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

Leave a Response