ரசிகர்களின் செலவுக்கு முட்டுக்கட்டை போட்ட ரஜினி…

rasikargal
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து நீண்ட காலம் ஆனதன் காரணமாக புதிதாக சந்திப்பு ஒன்றிற்கு திட்டமிட்டார். அதற்காக கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி சந்திக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்த அவர், சுமார் 2000 பேர் வரை சந்தித்து போட்டோ எடுத்து, விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஆனால் அது சாத்தியமாகாது என்று தோன்றிதாகவும் கூறினார். அதனால் மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்தித்து போட்டோ எடுப்பதற்கு ஏற்பாடும் செய்யப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்றம் புதிதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக அன்மதி சீட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி சீட்டு இல்லாதவர்கள் மண்டபத்திற்குள் நுழையா கண்டிப்பாக அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும் தலைவரை சந்திக்கவரும் ரசிகர்கள் காலில் விழுவதோ, மாலை போடுவதோ, சால்வை போத்துவதோ, கூடாது என்று அனுமதி சீட்டு வழங்கியவர்கள் வாங்கியவர்களிடம் வாய் மொழியாக கூறியுள்ளனர். ஏனென்றால் இவை அனைத்தும் தேவையற்ற செலவு என்றும். இதுபோன்ற செலவுகள் வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response