சிரஞ்சிவிக்கு வில்லனாக நடிக்கும் “பாகுபலி ராணா”…

raanaaa
தற்பொழுது பாகுபலி 2 படம் இந்தியா முழுக்க சக்கை போடு போடுகிறது. இப்படத்தின் புகழ் அனைத்து மொழிகளிலும் பேச படுக்கிறது. இந்நிலையில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா தற்பொழுது மிக பிரபலம் ஆகிவிட்டார் ஏனென்றால் இவர் இப்படத்திற்காக உடம்பை கட்டுமஸ்தாக மாற்றி உள்ளார். இவரின் உழைப்பால் வில்லனாகவும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் கைதி நம்பர் 150 படத்தை அடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் ஒரு அதிரடியான வில்லன் வேடம் உள்ளதாம். அதில் ராணா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சிரஞ்சீவி படம் என்றதும் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம் ராணா. வருகிற ஆகஸ்ட் 22-ந்தேதி சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Leave a Response