தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிப்பில் இராமாயணம்…

ramayana-animation-film
எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான வரலாற்றுத்திரைப்படம் பாகுபலி மிகப்பெரும் வெற்றியை பெற்று பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனம் வரலாற்று கதைகளின் மீது திருப்பி இருக்கிறது.

இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று கதையான மகாபாரதம் 1000 கோடி செலவில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக மலையாள இயக்குநர் வி.ஏ.குமார் அறிவித்து இருக்கிறார். இதில் பீமனாக நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. அதே போன்று தமிழில் சங்கமித்ரா எனும் சரித்திர படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.

இந்நிலையில் இராமாயணத்தை திரைப்படமாக எடுக்கப்போவதாக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 500 கோடி ரூபாய் செலவில் ராமாயணம் திரைப்படம் 3டியி்ல் உருவாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சீதா கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு தெலுங்கில் ராமராஜ்ஜியம் எனும் படம் ஏற்கனவே வெளியாகியது. இதில் பாலகிருஷ்ணா மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். தற்போது எடுக்கப்படும் ராமாயணம் படத்தில் நடிக்க நயன்தாரா, அனுஷ்கா மற்றும் தமன்னா பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Response