துப்பாக்கியை காட்டி திருமணத்தை நிறுத்திய மணமகனின் பழைய காதலி!

thaali1
கான்பூர் மாவட்டம் ஷிவ்லி பகுதியை சேர்ந்த தேவேந்திர அவஸ்தி என்பவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண நாளான கடந்த புதன் கிழமை (10.05.17) அன்று தாலி கட்டும் சில மணிநேரத்திற்கு முன் மண மேடைக்கு வந்த பெண் ஒருவர் மணமகனுக்கு நேராக துப்பாக்கியை நீட்டி, நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மணமகன், அவர் யார் என்றே தெரியவில்லை என்று சொன்னதும், துப்பாக்கியை தன்பக்கம் திருப்பு தற்கொலை செய்து கொள்வேன் என்று அப்பெண் மிரட்டியுள்ளார். மேலும் தேவேந்திராவின் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாகவும் கூறியிருக்கிறார். நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து திருமண கோலத்தில் நின்ற பெண் தேவேந்திராவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதும் பெரியவர்கள் அனைவரும் பேசி திருமணத்தை நிறுத்தினர்.

500 பேர் திருமணத்திற்கு வந்திருந்ததாகவும், மனமுடைந்த மணப்பெண் ஒரு ஏமாற்று பேர்வழியை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும் பெண்ணின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் பெண்ணின் உறவினர்கள் தங்களின் பணம் மற்றும் உடமைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் என்றும் அங்கு இருந்தவர்கள் கூறுகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றாலும் உண்மை என்ன என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Response