“பாகுபலி 3” வர வாய்ப்பில்லை என்று “பாகுபலி 2-ன்” கதையாசிரியர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு…

BAAHUBALI
அனைவரும் எப்பொழுது ‘பாகுபலி 2’ பாகம் வரும் அதில் கட்டப்பா ஏன் ‘பாகுபலி’ கொன்றார் என்று ஆர்வத்துடன் எதிர்பாத்தனர். தற்பொழுது இப்படம் வெளியாகி சக்கைபோடு போடுகிறது. இப்பொழுது அடுத்து ஒரு கேள்வி இருந்தது ‘பாகுபலி 3’ வருமா என்று அதை சார்ந்து பல புரளிகள் கிளம்பின அவை அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைக்குமாறு செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது இந்நிலையில், ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு ‘பாகுபலி 3’ படம் வருமா என படத்தைப் பார்த்த பின் ரசிகர்களும் கேட்க ஆரம்பித்தார்கள். ஆனால் ‘பாகுபலி 2’ படத்தின் தலைப்பிலேயே ‘முடிவு’என்ற இணை தலைப்பையும் வைத்துள்ளதால் மூன்றாம் பாகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதன் கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இதுபற்றிய தகவலை வெளியிட்டிருக்கிறார். மேலும் இரண்டு பாகங்களிலேயே ‘பாகுபலி’படத்தின் கதையை முடித்துவிட்டோம். மூன்றாம் பாகம் வர வாய்ப்பில்லை. ஆனாலும் டிவி தொடர்கள், காமிக்ஸ் தொடர்கள் வடிவில் ‘பாகுபலி’இருக்கும் எனக் குறிப்பிட்டும் உள்ளார்.

Leave a Response