89 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு மற்றும் கொள்ளையடித்த வாலிபருக்கு 100 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ம் வருடம் அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மோன்ட் என்ற நகரில் தனியாக வசிக்கும் 89 வயது விதவை பெண் வீட்டிற்குள் புகுந்த டெவின் ரெய்னி என்ற 23 வயது வாலிபர், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் கத்தி முனையில் அந்த பெண்ணை காரில் அழைத்து சென்று அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்து சென்றார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெய்னியை கைது செய்தனர்.
சிகாகோ புறநகர் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கு 60 வருடம் , கொள்ளையில் ஈடுபட்டதற்கு 40 வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.