மின் உற்பத்தி பாதிப்பால் இருளில் மூழ்கிய வடசென்னை..

vadachennai
சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்வெட்டால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் எழுந்த நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் நேற்றிரவு தொழில்நுட்ப பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மொத்த மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது

இந்த தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக, மொத்தமாக 1,830 மெகாவாட் மின்உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2ம் அலகில் 1,200 மெகாவாட் மின்உறபத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் சென்னை மட்டும் இன்றி தமிழகத்தில் பலஇடங்களில் மின்வெட்டு ஏற்ப்படும் அபாயம் இருப்பதாக கருதாப்படுகிறது.

Leave a Response