இரண்டு நாட்களுக்கு வடசென்னைக்கு குடிதண்ணீர் கிடையாதாம்

kudam 2
வடசென்னையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் 11ம் தேதி காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. காட்டுப்பள்ளி கடல்நீர் சுத்தகரிப்பு நிலைய பராமரிப்பு பணியால் குடிநீர் வராது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

மாதவரம், மணலி, படேல்நகர், திருவொற்றியூர், எர்ணாவூர், கொடுங்கையூருக்கு குடிநீர் வராது என்று தெரிவித்துள்ளது. கத்திவாக்கம், கண்ணதாசன் நகர், ராதாகிருஷ்ணன் நகர் பகுதிக்கும் 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அவசர தேவைக்கு கீழ் கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவொற்றியூர் – 8144930201 மணலி – 8144930615 மாதவரம் – 8144930206 தண்டையார் பேட்டை – 8144930254 தலைமை அலுவலம் புகார் பிரிவு – 044-45674567 044-28454040 and 044-28451318

Leave a Response