பெண் குழந்தை, போனில் ‛தலாக்’ சொன்ன கணவன்..!

thalaak
தேசிய விளையாட்டு வீராங்கனை பெண்குழந்தை பெற்றதால் கணவன் போனில் தலாக் என்று சொன்னதால் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

உ.பி.,யில் உள்ள அம்ரோகா எனும் ஊரை சேர்ந்த சியும்ளா ஜாவேத் தேசிய வாலிபால் வீராங்கனை. தேசிய போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை விரும்பாத அவரது கணவர், போனில் ‛முத்தலாக்’ கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சியும்ளா, இவ்விஷயத்தில் உ.பி., முதல்வர் தலையிட வேண்டும் என சியும்ளா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் ஆக்ராவை சேர்ந்த மற்றொரு பெண், இரட்டை பெண் குழந்தை பெற்றதால், அவருக்கும் அவரது கணவர் ‛தலாக்’ கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று தலாக் வார்த்தையை கண்டுபிடித்தவர் யார் தலாக் என்று சொன்னால் எல்லாம் முடிந்துவிடுமா. இந்த தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடவேண்டும். தலையிட்டு தலாக் எனும் வார்த்தையை உபயோகிக்க தடை விதிக்க வேண்டும்.

Leave a Response