விரைவில் இணையும் வடிவேலும் சிங்கமுத்தும்…

vadivel + Singamuththu
நடிகர்கள் வடிவேல் மற்றும் சிங்கமுத்து இனைந்து பல படங்கள் நடித்துள்ளனர். அவ்வனைத்து படங்களும் பெரும்பாலாக சூப்பர் ஹிட். ஒரு சில படம் ஹிட் ஆகவில்லை என்றாலும் அப்படத்தில் உள்ள காமெடி பெரிய அளவில் பேசப்பட்டவை. இன்றும் எந்த டி.வி.ம சானலை பார்த்தாலும் வடிவேல் மற்றும் சிங்கமுத்து இணைந்த காமெடி படங்கள் தான் அதிகம் ஒளிபரப்பபடுகிறது.

இந்நிலையில் சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு இந்த இருவருக்குள் வியாபார ரீதியாக விரிசல் ஏற்பட்டது. வடிவேலுவின் மேலாளராக சிங்கமுத்து இருந்தார். வடிவேலுவின் காமெடி ட்ராக்குகளை சிங்கமுத்து எழுதி வந்தார். வடிவேலுவின் மேலாளராக சிங்கமுத்து இருந்த காரணத்தினால், வடிவேலுவின் சில சொத்துகளுக்கு சிங்கமுத்து பவர் ஏஜென்டாக இருந்து வந்தார். சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு வடிவேலுவின் சொத்து ஒன்றுக்கு பவர் ஏஜென்டாக இருந்த சிங்கமுத்து அந்த சொத்தை வேறு ஒருவருக்கு எழுதி கொடுத்து பணம் ஏமாற்றி விட்டதாக சிங்கமுத்து மீது வடிவேல் கிரிமினல் புகார் கொடுத்து அவர் மீது வழக்கு தொடர்ந்தார். நாளடைவில் இத்தகைய பல வழக்குகள் சிங்கமுத்து மீது வடிவேல் போட்டார். இந்த வழக்குகள் அவ்வப்போது நீதிமன்றத்தில் வந்த வண்ணம் உள்ளது.

அந்த வழக்குகளில் ஒன்று, இன்று மதியம் 3:00 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருகிறது. அப்போது இருவரும் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு வழக்கை முடித்துக்கொள்ள போவதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்குகள் சுமுக தீர்வுக்கு வருவதற்கு காரணம், இவருடைய பிரதிநிதிகளும் பலமுறை இருவருக்குள் சுமுக உடன்பாடு ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று வடிவேல் மற்றும் சிங்கமுத்து இருவரும் நீதிமன்றத்தில் சந்தித்து பேசிக்கொள்ள வாய்புகள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இருவருக்குள்ளான வழக்குகள் சுமுகமாக முடிக்கப்பட்டு, வடிவேல் மற்றும் சிங்கமுத்து இனைந்து திரைத்துறையில் மீண்டும் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response