குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூபாய் 10,000 அபராதம்: சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்!..

lokshabha
புதிய சட்ட திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்ற பட்டது.

இது சாலை பாதுகாப்பு கருதி முக்கியதத்துவம் அளிக்கப்பட்டு, மோட்டார் வாகன சட்டம் 1988, சில திருத்தங்களுடன் இந்த சட்டதிருத்த மசோதா நேற்று நிறைவேற்ற பட்டது.

புதிய சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறினால் ரூ.500-ம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000-மும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2,000-மும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000மும் அபராதமாக விதிக்கப்படும்.

இதில் விபத்து தொடர்பான காப்பிடு தொகை திருத்தப்பட்டு, விபத்தில் காயாமடைந்தோர்க்கு ரூபாய் ஐந்து லட்சமும், விபத்தில் பலியானோருக்கு ரூபாய் பத்து லட்சமும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இழப்பீடு தொகையை விரைவாக வழங்கவு உத்தரவு பிரப்பித்துள்ளது.

மேலும் இந்த சட்டதிருத்ததின் முக்கிய அம்சங்களில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் வாகனத்தின் பதிவுகள் எல்லாவற்றிற்கும் ஆதார் அவசியமாகப்பட்டுள்ளது.

Leave a Response