பணம் பட்டுவாடாவை தடுக்க தெருவுக்கு இரண்டு பேரை நிறுத்திய அரசியல்கட்சியினர்!..

Tamil_News_large_1747504_318_219
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு, இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பணம் வினியோகம் செய்ததாக, தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதே போல், தி.மு.க.,வும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

பணம் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பறக்கும் படையினர் இல்லாத நேரங்களில், சில அரசியல் கட்சிகள் பணம் வினியோகம் செய்து வருகின்றன.

இந்நிலையில், மற்ற கட்சிகளின் பணம் பட்டு வாடாவை தடுக்க,அரசியல் கட்சியினர், தெருவுக்கு இருவரை நிறுத்தியுள்ளனர். வெளியூர் ஆட்களான இவர்கள், பணம் கொடுப்போரை பிடித்து, போலீசில் ஒப்படைத்து வருகின்றனர். நேற்று பணம் பட்டுவாடா செய்ததாகக் கூறி, புதுவண்ணாரப்பேட்டை, ஏ.இ.கோவில் தெருவில், தி.மு.க.,வினரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

Leave a Response