சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!…

karnadaka
கர்நாடக மாநிலம் மங்களூரு சூரத்கல் அருகே உள்ள சசிஹிட்லு பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு ஈடுசெய்ய முடியாத துயரம் ஏற்பட்டுள்ளது. அச்சிறுமி கம்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் தந்தையே, அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த பல மாதங்களாக தொடர்ந்து, சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளார். மேலும் அவளை மிரட்டி, யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமிக்கு வயிற்றில் வலி ஏற்படவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதில் சிறுமி கர்ப்பிணியாக இருந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். ஆனால் மருத்துவர் உட்பட யாரிடமும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தவர் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சில மணி நேரங்களிலே குழந்தை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து தன்னை சீரழித்தது தந்தை என்று அனைவரிடமும் கூறியுள்ளார். பின்னர் காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Response