டி.டி.வி தினகரனை வறுத்தெடுத்த மோனிகா!…

monica
நாடகம் முடியும் நேரத்தில் உச்ச காட்சி நடக்குதம்மா… என்ற பாடல் வரிக்கு ஏற்ப, ஆர்கே நகர் தொகுதியில், முக்கிய வேட்பாளர்கள் பிரச்சாரம் என்ற பெயரில் அளித்து வரும் வாக்குறுதிகளை பார்த்தால் வியப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளர் மோனிகா .

இந்த வகையில் டிடிவி தினகரன் விடுத்துள்ள தேர்தல் அறிக்கையும் இப்படி தான் இருகின்றது. ஆனால் தினகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற சி ஆர் சரஸ்வதி மீது அழுகிய தக்காளி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து தொகுதியை விட்டு மக்கள் துரத்திய பிரகு, அத்தொகுதியில் தினகரனுக்கு ஆதராவாக பேச நட்சத்திர பேச்சாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனராம்.

இது போன்ற சூழலில், சின்னத்திரை, திரைத்துறையில் சிறிய வேடங்களில் நடித்து வரும் நடிகையான மோனிகா அவர்கள் அவ்வப்போது சமூகம் சார்ந்த தனது கருத்துகளை கூறிவருகின்றார்.
தற்போது டிடிவி தினகரனை வாட்டி வதக்கியுள்ளார், அவர் வெளியிட்டுள்ள கருத்தில், ஆர் கே நகர் தொகுதி மக்களுக்கு 5700 வீடுகள் கட்டித்தரப்படும் என கூறியுள்ளார்.

ஆர்கே நகர் மொத்த வாக்காளர்களே 3 லட்சம் பேர் தான். வீட்டுக்கு 3 பேர் என்றாலும், இதிலேயே தொகுதி மக்கள் அனைவரும் அடங்கிவிடுவர். அப்படியென்றால் இத்தொகுதி மக்கள் அனைவருக்கும் வீடு கட்டி தர உள்ளாரா?

அப்படியென்றால் அதற்கான செலவு மத்திய அரசு வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்துக்கு கொடுப்பதாக அறிவித்த நிதியை விட அதிகமாக இருக்கும். ஏற்கனவே தமிழக கடன் சுமை அதிகமாக உள்ளது. என மோனிகா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response