நாளை தமிழக முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்!..

poliyo-thopa-20170128193011
தமிழகத்தில், 43,051 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை ஏப்ரல் 2ம் தேதியும், இரண்டாம் தவணை ஏப்ரல் 30-ந்தேதியும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.

பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Response