அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளர் தினகரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு…

saras
அ.தி.மு.க., – சசிகலா அணி வேட்பாளர் தினகரனை ஆதரித்து. நடிகை சி.ஆர்.சரஸ்வதி, நேற்று திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தபோது 42வது வார்டு, பாசுதேவ் தெருவில் அவர் மீது, அழுகிய தக்காளி பழங்களையும், காய்கறிகளையும், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வீசினர்.

ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., – பன்னீர் அணி வேட்பாளர் மதுசூதனன், நேற்று, 42வது வார்டு, பாசுதேவ் தெருவில், பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்பகுதி மார்க்கெட் அருகில், தினகரனை ஆதரித்து, அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி, திறந்த ஜீப்பில் நின்று, தொப்பி சின்னத்திற்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக சென்ற மதுசூதனன் ஆதரவாளர்கள் சிலர், ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்; இடியாப்பம் சாப்பிட்டார் என, தினந்தோறும் சொன்னீங்களே; கடைசியில், ஜெயலலிதாவை பிணமாக தானே கொண்டு வந்தீங்க’ என, கூச்சல் எழுப்பினர்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல், சரஸ்வதி மாட்டிக் கொண்டதால், மார்க்கெட்டுக்கு வந்த பெண்கள், அங்கு கிடந்த அழுகிய தக்காளி, காய்கறிகளை எடுத்து, சரஸ்வதி மீது வீசினர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Response