இன்று ஆறாவது நாளாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

Farmers
வறட்சி நிவாரணம் , கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் ஆறாவது நாளாக இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும். விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் , நதிகளை இணைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்திய தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

டெல்லியில் ஜந்தர் மந்தரில் நடைப்பெற்றுவருன் இந்த போராட்டத்திக்ல்தமிழக நதிநீர் இணைப்பு விவசாயிகள் நல சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் , பெண்கள் இப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் அரை நிர்வாண கோலத்திலும், நாமம் பூசிக்கொண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழக விவசாயிகள் தங்களது கோரிக்கை நிறைவேற்றக் கோரி ஆறாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழக விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றசாட்டையும் அவர்களை முன் வைத்துள்ளனர்.

Leave a Response