ஜெ வின் மகன் என கூறும் நபரை சிறையில் தள்ளிவிடுவேன் என எச்சரிக்கும் நீதிபதி

jeya-son
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகன் எனக்கூறி கொண்டு , சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி அதிர்ச்சியடைந்து அவரை சிறைக்கு அனுப்பிவிடுவதாக எச்சரித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன், நான் தான் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர், ஜெயலலிதாவை தனது தாயாக அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார். மேலும், அந்த மனுவில் ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்ததாகவும், அவர்களிடம் தனக்கு உயிர்பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் வாரிசுக்கு சேர வேண்டிய சொத்துக்களை முறைப்படி தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவைப் பார்த்த நீதிபதி அதிர்ச்சியடைந்து போலீசாரை கடிந்து கொண்டார். இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என தெளிவாக தெரிவதாக கூறிய நீதிபதி, கிருஷ்ணமூர்த்தியின் அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்கு உன்னை சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்றும் கிருஷ்ணமூர்த்திக்கு நீதிபதி மகாதேவன் எச்சரித்தார்.

Leave a Response