ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிப்பு

marudhu
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

சிம்லா முத்துசோழகன், ஏ.டி.மணி, வக்கீல் மருது கணேஷ் உள்ளிட்ட 17 பேர் சீட் கேட்டு மனு கொடுத்து இருந்தனர். அதனை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொகுதிக்கு பரீட்சயமான மக்களின் நன்மதிப்பை பெற்றவராக உள்ள ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. வேட்பாளர் தேர்வு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடமும் ஆலோசனை பெறப்பட்டது. வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று அறிவித்தார். வேட்பாளராக வக்கீல் மருது கணேஷ் நிறுத்தப்பட்டு உள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்தவர். கொருக்குபேட்டையில் வசித்து வருகிறார். தி.மு.க.வின் தொண்டராக பணியாற்றி தற்போது ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி செயலாளராக உள்ளார். வக்கீல் தொழில் செய்து வரும் இவர் ஏழை குடும்பத்தில் பிறந்தவர்.

Leave a Response