மின்சார வாரியம் நடத்தும் வெளிப்படையான நேர்காணல்…

Tamil naadu eb
தமிழ் நாடு மின்சாரவாரியத்தின் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கான இன்டர்வியூ வெளிப்படையான முறையில் நடைபெறும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களுக்கான இன்டர்வியூ இன்று (மார்ச் 13) முதல் வரும் 18ம் தேதி வரை வண்டலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த இன்டர்வியூ வெளிப்படையான முறையில் நடைபெற மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி , அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இன்டர்வியூ நடைபெற உள்ளது. தொடர்ந்து 6 நாட்கள் நடக்கும் இந்த இன்டவியூ குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் மாற்றப்படுவர்.

இதனைத் தொடர்ந்து இன்டவியூவுக்கு வருபவர்கள் இன்டவியூ நடத்தும் குழுவினரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்டவியூ வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response