ஏடிஎம்-ல் வந்த ‘சில்ரன் பேங்க் ஆஃப் இந்தியா’வின் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு!

carrency
டெல்லியில் உள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் இருந்து சில்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று குறிப்பிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன.

டெல்லியின் அமர் காலணியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த சந்திரன் என்பவருக்கு போலி 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன. இதைக் கண்டு அவர் உடனே காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அந்த போலி ரூபாய் நோட்டில் சில்ரன் பேங்க் ஆஃப் இந்தியா (Children Bank of India) என்றும் மனோரஞ்சன் பாங்க் (Manoranjan Bank) என்றும் அச்சாகியுள்ளது. மேலும், சுரான் லேபிள் (Churan label) என்றும் எழுதப்பட்டுள்ளது. இதே போன்ற, சுரான் லேபிள் (Churan label) உள்ள போலி நோட்டுகள் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி, டெல்லியின் சங்கம் விஹார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றிலும் வந்திருக்கின்றன.

காவல்துறை அந்த ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனங்களிடம் இருந்து விசாரணையைத் தொடங்கி நடத்திவருவதாக தெரிவித்துள்ளது.

Leave a Response