ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி…

seemaan
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெடுவாசலில் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடந்து வந்தது. பொதுமக்கள், மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை கருதி தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.சேலம் உருக்காலை பிரச்சினை, ஜல்லிக்கட்டு, தாமிரபரணி, அத்திக்கடவு-அவினாசி, மீனவர்கள் பிரச்சினை என தமழகத்தில் போராட்டமே வாழ்கையாக உள்ளது. மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை என மறுக்கிறது. அப்படி என்றால் இந்தியா கடற்படை சுட்டதா? சீன கடற்படை மீனவரை சுட்டு இருந்தால் இந்தியாவுக்கும் பெரும் ஆபத்து உள்ளது.

இந்திய பெருங்கடலையும், இந்தியாவை காக்கும் பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. உலக அளவில் மீனவர்கள் கடல் எல்லை தாண்டி மீன்பிடிக்க சென்றால் சுடப்படுவது இல்லை. இந்தியாவுக்கு நட்பு நாடு என்று சொல்லிக் கொள்ளும் இலங்கை அரசு மீனவர்களை சுடுகிறது. நமது மீனவர்களை படகுகளை மீட்க முடியவில்லை. ஆனால் போர்க்கப்பல்களை மட்டும் இந்திய அரசு, இலங்கைக்கு விற்கிறது.

எதிர்க்கட்சியாக இருந்த போது தற்போதைய மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கச்சத்தீவு மீட்போம் என்று கூறினார். அதற்காக கடற்தாமரை என்ற போராட்டமும் நடத்தினார். இதுவரை 843 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு உள்ளார்கள். இதில் பலர் இறந்துள்ளனர். கேரள மீனவர்களை இத்தாலி கடற்படை சுட்டுக் கொன்ற போது ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால் தமிழக மீனவருக்கு நிதி வழங்கவில்லை.எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் மீனவர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தூய அரசியலை நடத்தும் நோக்கில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்.

Leave a Response