200 ரூபாய் நோட்டு ஏடிஎம்.மில் கிடைக்காதாம்!

atm

ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு மேம்பாட்டு பிரிவின் காந்தி கூறுகையில், “அனைத்து நாடுகளுக்குமே பல மதிப்பிலான கரன்சி நோட்டுக்கள் அவசியம் தேவை. நமது நாட்டில் ரூ. 200 நோட்டுக்கள் இதுவரை புழக்கத்தில் இல்லை. ஆகவே இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான பணப் புழக்கத்துக்கு இந்த ரூ 200 நோட்டுக்கள் பெரிதும் உதவும். இந்த புது நோட்டுக்களின் அளவு தற்போதுள்ள நோட்டுக்களின் அளவிலிருந்து மாறு பட்டிருப்பதால் அவைகள் தற்போது ஏ டி எம் களில் கிடைக்காது. வங்கியில் மட்டுமே கிடைக்கும்.

2001

ஏ டி எம் இயந்திரத்தின் தட்டுக்கள் இந்த நோட்டுக்களின் அளவுக்கேற்ற செய்யப்பட்டு பொருத்தப் பட வேண்டும். அதற்குப் பிறகே ஏ டி எம் களில் இந்த ரூ.200 நோட்டுக்கள் கிடைக்கும். இந்த தட்டுகளை உருவாக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இவை தயாரானதும் விரைவில் பொருத்தப்படும். அதுவரை ஏ டி எம் களில் இந்த நோட்டுக்கள் கிடைக்காது.” என தெரிவித்துள்ளார்.

Leave a Response