“ஈரம்” அறிவழகன் மற்றும் அருண்விஜய் இணந்திருக்கும் குற்றம் 23 படம் வரும் மார்ச் 3 ந்தேதி ரிலீஸாகிறது.
மருத்துவ துறையில் நடக்கும் குளருபடியை மையமாக கொண்ட திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது “குற்றம் 23”.
ஈரம் படத்திற்கு பிறகு மிகப்பெரும் பட்ஜெட் படமாக இதை இயக்கியிருக்கிறார் அறிவழகன். அருண் விஜய் நண்பருடன் இணைந்து தானே தயாரித்து இருக்கிறார்.
ராஜேஷ்குமார் நவாலை அடிப்படையாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தின் திரைக்கதையிலும் ராஜேஷ்குமார் வேலை செய்திருக்கிறார்.
இந்தப்படத்தில் தரை துடைக்கும் வேலை தவிர அனைத்து வேலைகளும் செய்திருக்கிறேன். தயாரிப்பளாரக இருந்த அனுபவம் முற்றிலும் புதிதாக இருந்தது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது என்றார் அருண் விஜய்.
இயக்குனர் இது ஒரு போலீஸ் ஆக்ஷன் படமாக மட்டும் இருக்காது, பெண்களுக்கு பிடிக்கின்ற குடும்பப் படமாகவும் இது இருக்கும் என்றார்.
ராஜேஷ் குமார் திரைக்கதை, அறிவழகன் இயக்கம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறது “குற்றம் 23”.