நடிகை கீர்த்தி சுரேசை கடத்த திட்டம்

k16

பாவனா  கார்  டிரைவர்  சுனில்  நடிகை கீர்த்திவ்சுரேஷையும்  கடத்த  திட்டமிட்ட  சம்பவம் பற்றிய  திடுக்கிடும்  தகவல்  தற்போது  வெளியாகியுள்ளது.

பிரபல  நடிகை பாவனாவை கடத்தி பாலியல்  கொடுமை செய்த  வழக்கில்  முக்கிய  குற்றவாளியான கார்  டிரைவர்  சுனில்  தலைமறைவாக  இருக்கிறான்.  அவனைப்    பற்றி மலையாள திரை   உலகினர் பல்வேறு  திடுக்கிடும்   தகவல்களை   தற்போது  வெளியிட்டு  வருகிறார்கள்.

அவனை போலிஸார்   மிகத்தீவிரமாக தேடி வருகிறார்கள்

டிரைவர்  சுனில்  நடிகை  பாவனாவிடம்  கார் டிரைவராக  பணியாற்றிய  போது  அவர்  மூலம்   பல மலையாள  நடிகைகளுடன்   பழக்கம்  ஏற்பட்டது.  அவர்களது  நடவடிக்கைகளை கவனித்த சுனில் நடிகைகளை கடத்திபணம்   பறிக்க திட்டமிட்டிருக்கிறான்.

கீர்த்தி சுரேஷ்  கைவசம்  நிறைய  படங்கள்  இருப்பதால்  அவரை கடத்தி  பணம்  பறிக்கலாம்  என்று சுனில்திட்டமிட்டான்.  இதற்காக   கீர்த்தி சரேஷின்  கார்டிரைவருடன்  சுனில்  நட்பு ஏற்படுத்திக்கொண்டு  தனது  திட்டத்தை  செயல்படுத்த  முடிவு  செய்தான்.  அதற்கு  அவனும் சம்மதித்தான்.

கீர்த்தி சுரேஷ்   எப்போது  தனியாக  காரில்  போவார்  என்று  டிரைவர்  மூலம்  நோட்டமிட்டான். செல் போனில் ‘ஒய்’  என தகவல்  அனுப்பினால் இன்று  கடத்தலாம்  என்றும்,  ‘எக்ஸ் ’ என்றால்  இன்று கடத்துவதற்கான  சூழ்நிலை  இல்லை  என்றும்  ரகசிய வார்த்தைகளை  பரிமாறிக் கொள்வது என முடிவு  செய்தனர்.

சம்பவத்தன்று   அவசரத்தில்  அந்த  டிரைவர்  ‘ஒய்’   என தவறுதலாக  சுனிலுக்கு  செல்போனில் தகவல்   அனுப்பிவிட்டான்  உடனே   சுனில்  தனது  கும்பலுடன்  சென்று   கீர்த்தி  சுரேஷ்  காரை  மடக்கி   நிறுத்தி  உள்ளே ஏறி  கடத்திச் சென்றான். ஆனால் அதன் பிறகு  தான் காரில்   இருந்தது கீர்த்தி சுரேஷின்  தாயார்  மேனகா  என  தெரியவந்தது.  அவரை கடத்தி பயன் இல்லை என்பதால் விட்டுவிட்டான்.

குடும்ப  கவுரவம்  கருதி  இது  பற்றி  மேனகா  குடும்பத்தினர்   போலீசில்  புகார்   செய்யவில்லை. தற்போது  சுனில் பற்றிய தகவல்கள்  வெளியானதும்  அவன்  தான்  கீர்த்தி  சுரேஷை  கடத்த திட்டமிட்டவன்  என்பதை  மேனகாவின்  கணவர்  சுரேஷ்குமார் அறிந்து  அதிர்ச்சி அடைந்தார். அவர் தான் தற்போது   சுனில் பற்றிய  தகவலை  தனது  நண்பர்கள் மூலம்வெளியிட்டுள்ளார்.

Keerthi-Suresh-with-Family

Leave a Response