பாடகி மற்றும் ஆர் ஜே சுசித்ரா நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக போட்ட டிவீட்டுகள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
”தனுஷ் ஒரு கடவுள். நான் அவர் பாதங்களைத் தொடவிரும்புகிறேன்.”
”தனுஷ்… என்னிடம் இருந்து விலகி இருங்கள்.”
”த்ரிஷா ஒரு பெண் தெய்வம். தனுஷ் ஒரு கடவுள்! இதை ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.”
”இது என் கை – தனுஷ் தரப்பினரால் காட்டுத்தனமாக கையாளப்பட்ட கை.”
”சிம்புதான் வெற்றியாளர்.”
என தொடர்ச்சியாக பதிந்த பதிவுகள் பெரும் குழப்பத்தை உண்டு பன்ணியது. விளக்கம் கேட்டு பத்திரைக்கையாளர்கள் தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும் விதமாக ட்வீட் செய்தார். ஆனால், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மேலும், காயம்பட்ட தனது கையை புகைப்படம் எடுத்து அதையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஒரு பெரிய பிரச்சனை நடந்திருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதில் தனுஷ், திரிஷா, சிம்பு ஆகியோர் என்ன பாத்திரம் எனபது தெரியவில்லை.