மோசடி வழக்கில் கைதான பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்

dc-Cover-v4ulein3rkpqhk3026lbl3tkn2-20170110092357.Mediநடிகர் மற்றும் அதிமுக பிரமுகரான பஷீர் என்கிற விஜய்கார்த்திக் நேற்று மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இது குறித்து இன்று அதிமுக பொதுசெயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் காரணத்தினாலும், திரு.J.M.பஷீர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர்கூ சசிகலா கூறியுள்ளார்.

Leave a Response