தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என பாஜாக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாமி கூறியுளளார்.
ஜல்லக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாட்டில் பல்வேறு மாவடடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயக்குமாறு முதலமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட பல கட்சித்தலைவர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.
இந்நிலையில் தடையை மீறி ஜல்லக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சுப்பிரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.