உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார் ஸ்டாலின்: சசிகலா குற்றச்சாட்டு

sasikala2-knqd-621x414livemintஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

அவர் வெளியிடுள்ள அறிக்கையில்,

காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் ஜல்லிகட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. அப்போதே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திக் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி இருந்தார்.

ஜெயலலிதா அவர்களின் ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போரட்டத்தின் உண்மைகளை முதலில் மு.க.ஸ்டாலின் தெரிந்துகொள்ள வேண்டும். உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம். மக்களை திசை திருப்பும் முயற்சியில் மு.க. ஸ்டாலின் ஈடுபடுவது பொறுப்பான செயல் அல்ல.

தமிழத்தின் உரிமைகளைக் காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெயலலிதா அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Response