’துருவங்கள் பதினாறு’ படத்தை பாராட்டிய சுந்தர்.சி

page-stoper-850x420-copyநடிகர் ரகுமான் நடிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் துருவங்கள் பதினாறு.

இப்படத்தைப் பற்றி அவர் கூறுகையில்,  ” இந்தப் படம் தமிழில் அரிதான முயற்சி. இந்த வகையில் இதுவே முதல் படம் என்று கூறலாம்.

புதிய இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

அவர்களுக்கு 100 க்கு 100 மார்க் தரலாம். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அருமையாக இருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அற்புதமாக இருக்கிறது. படம் ஹாலிவுட் தரத்துக்கு உள்ளது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் படம் மனநிறைவு தரும்.

இம்மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தினால் மேலும் நல்ல படங்கள் வரும்.படக் குழுவுக்கு பாராட்டுகள்” என்று கூறினார்.

Leave a Response