தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இந்தப்படங்கள் பெரிதாக வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் தமிழில் படங்கள் நடிக்கவில்லை. பின்னர் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்க கேட்டனர், அதையும் மறுத்துவிட்டார். இந்நிலையில் கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கு ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.
கார்த்தி தற்போது ”காற்று வெளியிடை” படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். கார்த்தி நடிக்கும் இந்த புதிய படத்தில் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தை டிரீம் வாரியர்ஸ், எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.