எல்லைப் பகுதியில் பாக்., படைகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரின் ஆர்.எஸ்., புரா பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நுழைந்து நேற்று தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய படைகள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் இன்று மீண்டும் ஆர்.எஸ்.புரா அருகே உள்ள பகுதியில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளன.
இந்த தாக்குதலில் பொது மக்கள் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு முதல் தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஆர்.எஸ்.புரா பகுதியில் நடத்தப்படும் 2வது தாக்குதல் இதுவாகும்.
தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.