இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு


fishermenராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே நாட்டுப்படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தலைமன்னார் முகாமுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மீனவர்கள் விபரம் குறித்து விபரம் இதுவரை தெரியவில்லை.


 

Leave a Response