செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சாய் பல்லவி


 

sai-pallavi

”நெஞ்சம் மறப்பதில்லை” படத்தைத் தொடந்து செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் சந்தானம் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.

இது காமெடி படமாக இருக்காது என்றும், மிகவும் மென்மையான காதலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். சந்தானம் ஜோடியாக ரெஜினா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரது கால்ஷீட் உடனே கிடைக்கவில்லை.

எனவே அவருக்கு பதிலாக ”பிரேமம்”படத்தின் மூலம் பிரபலம் ஆன சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

‘செல்வராகவன் படத்தில் நடிப்பது பற்றி ஓரிரு நாளில் சாய் பல்லவி முடிவு செய்வார்’ என்று, அவரது தரப்பில் தெரிவித்துள்ளனர்.


 

Leave a Response