ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது!

semmaram
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டம் ராயசோட்டி, லக்கிரெட்டி பள்ளி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் மற்றும் வனத்துறையினர் இணைந்து நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு கார், 2 பைக்குகளில் வந்த நபர்களை சோதனையிட்டதில் அவர்கள் தமிழகத்திற்கு செம்மரங்கள் கடத்துவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 34 பேரை புலிவேந்தலா போலீஸார் கைது செய்தனர்.

மேலும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 வாகனங்கள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Response