பணத்துக்காக தன்னுடைய‌ அம்மாவை கூட‌ அழவைப்பார் சங்கையா..? ராதா ரவியின் உண்மையான முகம் இது தான்..!

 

radharavi

எதுக்கு இந்த மாதிரியான டைட்டில் அப்படின்னு பாக்குரிங்களா..?, அட ஆமாங்க சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தின் முன்பு ஒரு ஆர்பாட்டம் நடைப்பெற்றது. அதில் சங்கைய்யா பணம் கொடுத்து அழைத்து வந்த சில பெண்கள் என்னமா அழுதார்கள் தெரியுமா, நிஜமாகவே அவர்களை பார்க்கும் போது “என்னமா கூவுராண்டா கொய்யால” அப்படின்னு சொல்ல நினைக்குது மனம். எதுக்கு இப்படி அழனும் அப்படின்னு நம் மனதுக்குள் எழுந்த சந்தேகத்தின் பெயரில் இதைப் பற்றி ஆராய ஒரு குழுவை அமைத்து நம் இணையதளம் வேலை பார்த்து அதில் கிடைத்த சில அதிர்ச்சி தகவல்கள் உங்களுக்காக.

கிட்டத்தட்ட சில மாதங்களாக நடிகர் சங்கத்தின் மீதும் அதன் உறுப்பினர்களின் மீதும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது, என்னடா ஒரு புறம் அவங்க எங்க தலைமையிலான சங்கம் மிகவும் அருமையாக செயல்பட்டு வருகின்றது, உறுப்பினர்கள் எல்லோரும் சந்தோஷமாக உள்ளனர் யாருக்காவது எதாவது ஒண்ணு என்றால் உடனடியாக எங்கள் தலைமையிலான சங்கம் உதவிக்கரம் நீட்டுகின்றது என்று கூறுகின்றனர், இன்னொரு புறம் சங்கம் செயல்படவில்லை சங்கத்தில் 3 கோடி ஊழல் என்று தொடர் குற்றசாட்டு வந்தது.

இது என்னடா யாரு சொல்வதை நாம் நம்புவது. மக்களுக்கு நாம் எப்படி உண்மையை சொல்வது என்று குழப்பத்தில் இருந்தோம் அப்போது தான் இதை பற்றி ஆராய ஆரம்பித்தது நமது குழு இரவு பகல் பார்க்காமல் இதை பற்றி செய்தி சேகரித்து தற்போது நமக்கு ஒரு தெளிவான தகவல் வந்துள்ளது.

அது என்னவென்று நீங்களே பாருங்கள் :-

கடந்த மாதம் நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் 3 கோடி ஊழல் செய்துள்ளதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது அது எப்படி நீங்களே சொல்லுங்கன்னு என்று கோட்களாம். அது எப்படின்னா அந்த புகார் கொடுத்ததுக்கு முக்கிய காரணம் நடிகரும் முன்னால் நடிகர் சங்கத்தில் பதவியில் இருந்த “ராதா ரவி” தான். விஷால் தன்னை தோற்கடித்ததை தாங்க முடியாமல் இப்படியெல்லாம் செய்து வருகின்றார்.

அதுமட்டுமல்ல சமீபத்தில் விஷால் தாயாரிப்பாளர் சங்கத்தில் வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கூறியிருந்தார், அதன் பின் தான் இந்த மாதிரியான வதந்திகள் பரவ ஆரம்பித்தன, அதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் “தாணு” அவர்கள் தான் என்று சொல்லப்படுகின்றது. தாணு அவர்கள் ராதாரவியிடம் இந்த மிஷினை ஒப்படைத்துள்ளதாகவும், ராதாரவி இந்த பிளானை ஜே.கே.ரித்தீஷ், சங்கையா மற்றும் பலரிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் பரவலாக பேசப்படுகிறது. இவ்வாறாகத்தான் இந்த சதி நடிகர் சங்கத்துக்கும், விஷாலுக்கும் எதிராக செயல்பட்டு கொண்டிருப்பதாக சொல்லப்பட்டிவருகிறது.

ராதாரவி மற்றும் அவர் டீமின் சமீபத்திய பிளான் என்னவென்று தெரிய வேண்டுமா கீழே படியுங்கள் :-

ராதாரவியின் பிறந்த நாள் விழா ஜூலை 29ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் ஜே.கே ரிதீஸ், சங்கையா உள்ளிட்டவர்கள் சந்திச்சிருக்காங்க. சங்கையா என்பவர் நடிகர் சங்கத்தில் ஏ.ஆர்.ஓவாக வேலை செய்தவர். சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்களை படப்பிடிப்பில் ஈடுபடுத்தியதாலும், டெல்லியில் நடந்த எந்திரன் 2.ஒ வில் அங்கு இருக்கும் ஜூனியர் ஆர்டிஸ்டூகளுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாலும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் (டெல்லி ஏஜெண்ட் வினோத் என்பவர் இது குறித்த புகாரை நடிகர் சங்கத்தில் கொடுத்துள்ளார். விசாரணையில் சங்கையா 23 லட்சம் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து செயற்குழுவில் அவரை நீக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது). இதனால் விஷால் அணியில் இருந்தவர் ராதாரவியின் ஆதரவாளராக தற்போது மாறியுள்ளார்.

ராதாரவியின் பிறந்த நாளில் இவர்கள் சந்தித்தபோது ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலிடம் உங்கள் அணியின் சார்பில் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று ரித்தீஷ் கேட்பாராம். அவர்கள் எப்படியும் வேண்டாம் என்று கூறுவர்கள். இதனால் தற்போதைய தலைவர் தாணுவின் ஆதரவோடு அவரது அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். விஷால் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டால் நான் இந்த முடிவை எடுக்கவில்லை நீங்கள்தான் எடுக்க வைத்தீர்கள் என்று விஷால் அணியினரிடம் கூற முடியும்.

தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கைகள் சரியில்லை அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று விஷால் கூறியதால் அவர்களுக்கு எதிராக களம் இறக்கப்படும் ரித்திஷ்க்கு தாணுவே தன்னுடைய பணத்தை செலவு செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஜே.கே.ரித்திஷால் முன்பு மாதிரி அதிகம் செலவு செய்ய முடியாத சூழல் இருக்கிறது என்பது வேறு கதை. இதனால் தாணுவை பகடைக்காயாக பயன்படுத்திக்கொள்ள ராதாரவி தந்திரமாக முடிவெடுத்துவிட்டார்.

இதை தொடர்ந்து விஷால் அணியினர் மீது குற்றச்சாட்டை வைக்கவேண்டும். அதற்கு தங்களின் ஆதரவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் தன்னுடைய நண்பர் வாராகி மூலமாக நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பவது. அதன் மூலம் மக்கள் மனதிலும், உறுப்பினர்கள் மனதிலும் விஷால் அணியினர் மீது அவப்பெயரை ஏற்படுத்த முடியும். இதனால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் அணியினர் மீது யாருக்கும் நம்பிக்கை வராது என்பது அவர்களின் கணக்கு. மேலும் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கட்டடம் கட்டும் பணியை துரிதமாக தொடங்கியுள்ளனர். அதுவும் தமிழக முதலமைச்சரும், நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினருமான ஜெயலலிதா அவர்களின் கையால் அடிக்கல் நாட்ட வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். இதை தடுக்கவும், அ.இ.அ.தி.மு.க வட்டாரத்தில் நற்பெயரை எடுத்திருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை பிரிப்பது என்று முடிவெடுத்துள்ளனர். அதுக்காகதான் விஷாலின் நெருக்கிய நண்பர் உதயநிதி ஸ்டாலின் என்றும், அவரோடு சேர்ந்துக்கொண்டு பல திட்டங்களை தீட்டுகிறார் என்பது மாதிரியான ஒரு பிம்பத்தை உருவாக்கி முதல்வரின் மனதில் அதிருப்தியை ஏற்படுத்த தி.மு.க என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.

சங்கத்தில் இருந்து தற்காலிகமாக‌ நீக்கப்பட்ட ஏ.ஆர்.ஓ சங்கையா, உண்மையான ஊறுப்பினர்கள் சிலரையும், பின்னால் நிற்க சில ஆட்களையும் அழைத்துக்கொண்டு நடிகர் சங்கத்தினருக்கு எதிராக கோஷங்களை எழுப்ப வேண்டும். இது சங்கையாவிற்க்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்.

மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மீது அவப்பெயரை ஏற்படுத்தினால் அவர்களின் நடவடிக்கை மீது நம்பிக்கையின்மையும், குழப்பமும் ஏற்படும். இதன் மூலம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எந்த போட்டியும் இல்லாமல் ஜே.கே. ரித்திஷை தலைவராக்கிவிடலாம். அதேபோல விஷால் தி.மு.கவின் ஆதரவாளர் என்ற பிம்பத்தை உருவாக்கி முதலமைச்சரின் கோபத்தை அவர்மீது உண்டாக்க முடியும். இது நடந்தால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முதல்வரின் ஆதரவு மறைமுகமாக தங்களுக்கு கிடைக்கும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.

இதற்கு எல்லாம் ராதாரவி திட்டமிட்டு கொடுத்துள்ளார். காரணம்! 30 வருட காலமாக நடிகர் சங்கத்தில் ஆட்சி நடத்திவந்த அவரை தோற்கடித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான். அதற்கு விஷாலின் நண்பராக இருந்த ஜே.கே.ரித்தீஷை பிரித்து அவருக்கு எதிராகவே செயல்பட வைக்க வேண்டும் என்று தாணு, சரத்குமார், ராதாரவி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் திட்டத்திற்கு ஜே.கே. ரித்தீஷ் இறையாகியுள்ளார்.

– ஸ்ரீநாத்

Leave a Response