மீண்டும் சரும வியாதியில் சிக்கிய நடிகை சமந்தா?

Samantha Skin Disease
தமிழ் திரையுலகிற்கு, 2010’ம் ஆண்டும் வெளிவந்த “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படம் மூலம் ஒரு சிறிய கதா பத்திரத்தில் அறிமுகமாகி, அதே நேரம் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் தெலுங்கு படைப்பான

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சற்று பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகிற்கு, 2010’ம் ஆண்டும் வெளிவந்த “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படம் மூலம் ஒரு சிறிய கதா பத்திரத்தில் அறிமுகமாகி, அதே நேரம் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் தெலுங்கு படைப்பான “ஈ மாயே சேசாவே” என்ற படத்தில் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பின்னர் குறுகியகாலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மொத்தம் 35 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.

2012’ம் ஆண்டில் இயக்குனர்கள் மணிரத்தினத்தின் “கடல்” மற்றும் ஷங்கரின் “ஐ” திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செயப்பட்டார். அந்த காலக்கட்டத்தில் சமந்தா சரும வியாதியால் சற்று கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். பின்னர் அந்த சரும பிரச்சனை அதிகமாக அவரால் சில மாதங்கள் நடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த விவரம் அறிந்த இயக்குனர்கள் மணிரத்தினம் மற்றும் ஷங்கர், சமந்தாவினால் இவர்களுடைய படங்களில் நடிப்பது கடினம் என்பதை உணர்ந்து சமந்தாவை அவர்களின் “கடல்” மத்ர௮உம் “ஐ” படங்களில் இருந்து தூக்கிவிட்டனர். சில மாதங்கள் ஓய்வில் இருந்த சமந்தா, மீண்டும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார். மீண்டும் 2014’ம் ஆண்டு சூர்யாவுடன் லிங்குசாமி இயக்கத்தில் “அஞ்சான்” படத்தில் நடித்து கொண்டிருந்தார். அந்த சமயத்திலும் சரும வியாதியால் சற்று அவஸ்தைப்பட்டார். பின்னர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நடித்து அப்போது நடிதுகொண்டிருந்த “அஞ்சான்” மற்றும் சில தெலுங்கு படங்களையும் நடித்து கொடுத்தார்.

தொடர்ந்து நடித்து நடித்து கொண்டிருக்கும் சமந்தா, தற்போது தமிழில் நடிகர் சூர்யாவுடன் “24”, விஜய்யின் “தெரி”, தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த நான்கு படங்களில் சூர்யாவுடன் நடித்த “24” மட்டும் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு மற்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் மூன்று படங்களில் நடிக்கும் சமந்தாவிர்க்கு மீண்டும் சரும வியாதி அதிகரித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக படப்பிடிப்புக்கு செல்லாமல் மருத்துவமனை மற்றும் வீடு என அலைந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை சமந்தா என்று சொல்லப்படுகிறது.

இந்த விஷயம் வெளியில் தெரிய வர, நடிகர் விஜய் மற்றும் “தெரி” படத்தின் இயக்குனர் அட்லி மற்றும் சமந்த தற்போது நடித்து கொண்டிருக்கும் இரண்டு தெலுங்கு படங்களின் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

சமந்தா சரும வியாதியிலிருந்து விரைவில் குணமடைந்து இந்த மூன்று படங்களையும் நடித்து முடித்து விட்டால் படக்குழுவினருக்கும் சரி, சமந்தாவிற்க்கும் சரி நல்லது. “கெட் வெல் சூன் சமந்தா”.

Leave a Response