விஜய் சேதுபதி நீங்க ஒரு பச்சோந்தி! நடிகர் சித்தார்த் பரபரப்பு பேச்சு:

Sethupathi Audio Launch Stills (41)
விஜய் சேதுபதி நடித்து S U அருண்குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் “சேதுபதி”.  இத்திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று (20 ஜனவரி 2015) அன்று சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இசை மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவின் பொது “சேதுபதி” படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் திரையிடப்பட்டது.  பின்னர் விழாவிற்கு வந்த சினிமா பிரபலங்கள் சிலர் மேடையில் பேசினார்.  நடிகர் சித்தார்த் பேசுவதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டார்.

அப்போது சித்தார்த் பேசியதாவது,  “விஜய் சேதுபதி நீங்க ஒரு பச்சோந்தி!  நீங்கள் எந்த படத்தில் நடித்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் பொருத்தமாக அமைகிறீர்கள். நான் இந்த விழாவிற்கு வந்த முக்கிய காரணம் இப்படத்தின் இயக்குனர் தான். நான் “பான்னையாரும் பத்மினியும்” படம் பார்த்து வியந்தேன். அது ஒரு அருமையான படம். என்னுடைய அம்மா மூன்று முறை அந்த படத்தை ரசித்து பார்த்தார்கள்.  விஜய் சேதுபதியின் “பீட்ஸா” படம் பார்த்ததிலிருந்து நான் அவருடைய ரசிகனாகிவிட்டேன்.

விஜய் சேதுபதி, உங்களை பார்த்தால் எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது.  ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் பார்த்த பிறகு நான் S U அருண்குமாரிடம் எனக்கு ஒரு படம் இயக்கு என்று கேட்டேன். அவர் நான் என்னுடைய முந்தைய கதாநாயகன் விஜய் சேதுபதியை வைத்து இப்போது படம் இயக்கவிருக்கிறான் என்றார். சரி இயக்குனர் நலன் குமாரசாமியிடம் கேட்டேன் எனக்கு ஒரு படம் இயக்க சொல்லி. அவரும் நான் என்னுடைய முந்தைய கதாநாயகன் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறான் என்றார். சரி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை தொடர்புகொண்டு எனக்கு ஒரு படம் இயக்கு என்று கேட்டேன். அவரும் நான் என்னுடைய முந்தைய கதாநாயகன் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவிருக்கிறான் என்றார்.  யாரை கேட்டாலும் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க போவதாக சொல்கிறார்கள். விஜய் சேதுபதி நீங்களே எல்லா இயக்குனரையும் அழைத்து எல்லா படத்திலும் நடித்தால்  எங்களை போன்ற நடிகர்கள் என்ன செய்வது. அந்த இயக்குனர்களை எங்களை போன்றவர்களுக்கும் படம் இயக்க அனுப்பி வையுங்கள்.”.  இவ்வாறு நடிகர் சித்தார்த், விஜய் சேதுபதியை பற்றியும் அவருடைய படங்களின் இயக்குனர்களை பற்றும் பேசினார். அவருடைய பேச்சை கேட்ட பார்வையாளர்கள் சித்தார்த் உன்மையில் மனதார பாராட்டுகிறாரா, அல்லது அவர் சொல்லியதை போல் உன்மையில் வயிற்றெரிச்சலுடன் தான் பேசினாரா என்று முணுமுணுத்தனர்.

Leave a Response