முதல் படம் துவங்கும் முன்னரே, அடுத்த படத்தில் நடிக்கும் விக்ரம்..!

vikram-thiru

S.S.F என்ற பட நிறுவனம் ஏற்கனவே ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த “ சிங்கம்புலி “ படத்தை தயாரித்துள்ளது. அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது . இந்த படத்தை திரு இயக்குகிறார். இவர் விஷால் நடித்த “ நான் சிகப்பு மனிதன், சமர், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கியவர். இன்னும் படதிற்கு  தலைப்பு வைக்கவில்லை. நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும்.

விக்ரம், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஏற்கனவே நடிப்பதாக இருந்தார். கலைப்புலி தாணு தயாரிப்பதாக இருந்த அந்தப்படம் பின்னர், லைகாவிற்கு கை மாறியது. இருப்பினும் படத்தை துவங்கியபாடில்லை. லைகாவும் கையைவிரித்துவிட்டது. இந்நிலையில் விக்ரம் அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Satheesh Srini

Leave a Response