இயக்குனர் சற்குணத்துடன் இணைந்த நயன்தாரா..!

nayanthara sarkunam

களவாணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சற்குணம். இவர் இயக்கிய இரண்டாவது படமான “வாகை சூடவா” திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. அதன் பிறகு நையாண்டி, சண்டி வீரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மஞ்சப்பை படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். தற்பொழுது இரண்டாவது படத்தை தயாரிக்க உள்ளார்.

இது குறித்து இயக்குனர் சற்குணம் கூறியதாவது, எனது தயாரிப்பு நிறுவனமான “A Sarkunam Cinemaz”-ன் முதல் படமான மஞ்சப்பை திரைப்படத்தை எனது உதவியாளர் ராகவன் இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது. இதை தொடர்ந்து எனது நிறுவனத்தின் இரண்டாவது படத்தில் நடிகை நயன்தாரா முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ளார். இக்கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நான் இயக்கிய களவானி முதல் சண்டிவீரன் வரை என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம். இப்படம் திகிலூட்டும் கிரைம் திரில்லராக நகைச்சுவை கலந்த திரைக்கதையில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்படவுள்ளதாம்.

Satheesh Srini

Leave a Response