த்ரிஷா-வருண்மணியன் திருமணம் – இதைத்தானே நாங்களும் சொன்னோம்..?

கடைசியில் பூனைக்குட்டி வெளியேவந்துவிட்டது கதையாக இப்போது தனது திருமணம் குறித்த அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் த்ரிஷா. அவர் மணக்க இருப்பது தயாரிப்பாளர் வருண் மணியனைத்தான். இவர்களது நிச்சயதார்த்தம் ஜனவரி-23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருமணம் எப்போது என்கிற தேதி குறித்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என அதில் கூறியுள்ளார் த்ரிஷா

இதைத்தானே நாங்கள் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டோம்.. அப்போது அப்படி எல்லாம் இல்லை என பூசி மெழுகிய த்ரிஷா இப்போது அதே வருண்மணியனைத்தானே திருமணம் செய்யப்போகிறார்.. கதாநாயகிகளுக்கு இது ஒரு வாடிக்கை.. அவர் யாரை திருமண செய்யப்போகிறார் என பத்திரிகையில் செய்தி வெளிவந்தாலும் அதனை உடனே மறுப்பது.. பின் கொஞ்ச காலம் கழித்து அவரையே மணம் முடிப்பது.. அதற்கு த்ரிஷா மட்டும் விதிவிலக்கா என்ன..?

த்ரிஷா திரையுலகிற்குள் நுழைந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. இன்னும் கதாநாயகியாகவே நடித்துக்கொண்டிருந்தாலும் அம்மா, அக்கா வேடங்கள் தேடி வருவதற்குள் ஒரு கல்யாணத்தை பண்ணிக்கொள்ள மாட்டாரா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதற்கேற்ற மாதிரி கடந்த சில வருடங்களாகவே த்ரிஷா யாரை திருமணம் செய்யப்போகிறார் என்பது குறித்து பல வதந்திகள் அந்தந்த சமயங்களில் உலாவந்தன. ஒரு வழியாக இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் த்ரிஷா..