“எடிசனுக்கு என் முதல் படத்திலேயே நன்றி சொன்னேன்” – பார்த்திபன் பெருமிதம்

மை தமிழ் மூவி டாட் காம் நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக “எடிசன் பிலிம் அவார்ட்ஸ்” என்ற பெயரில் தமிழ்த் திரைப்படங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த வருடம் எட்டாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இதற்கான தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பார்த்திபன், ரமேஷ்கண்ணா, நதன இயக்குனர் பாபி உட்பட பலர் கலந்துகொண்டனர். ரமேஷ்கண்ணா பேசும்போது ‘எடிசன்’ பெயரை சினிமாக்காரர்களே ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை” என ஆதங்கப்பட்டார். அடுத்து பேசிய பார்த்திபன், “எடிசனுக்கு என் முதல் படத்திலேயே நான் என்ட் கார்டில் நன்றி சொல்லியிருந்தேன்” என ஞாபகப்படுத்தினார்.

மை தமிழ் மூவி டாட் காம் இணையதளத்திற்கு சென்று ஒவ்வொரு பிரிவிலும் இந்த விருதுக்கு யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ அவருக்கு ஆன்லைனிலேயே வாக்களிக்காலாம். அதிக வாக்குகள் வென்றவர்களுக்கு எடிசன் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.