“சூர்யாவும் நீங்களும் ஒண்ணு” – மகேஷ்பாபுவை ஐஸ் வைத்த சமந்தா..!

சமீபத்தில் ஹைதராபாத்தில் ‘ஹூட் ஹூட்’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண நிதி சேகரிக்கவேண்டி தெலுங்கு திரையுலகம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் நடிகர்கள், நடிகைகள் தங்களுக்குள் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அப்போது மகேஷ்பாபு சமந்தாவிடம் விஜய் மற்றும் சூர்யா இருவருடன் நடித்த அனுபவங்கள் பற்றி கேட்டார்.. அதற்கு பதில் அளித்த சமந்தா, “விஜய் ஸ்பிளிட் பர்சனாலிட்டி கொண்டவர் மாதிரி.. ஷாட் இல்லாத நேரங்களில் ஒருமணி நேரமானாலும் அமைதியாக இருப்பவர், ஷாட் ரெடி என குரல் கொடுத்தால் கேமரா முன்னாடி அப்படியே தீயாக நிற்பார்.

அதே சமயம் சூர்யா பற்றி குறிப்பிடும்போது “சூர்யாவும் நீங்களும் ஒரே மாதிரி. எளிமையாக, பணிவாக அதேசமயம் இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதை இம்மி பிசகாமல் தருபவர்கள்” என மகேஷ்பாபு, சூர்யா இருவருக்கும் ஒரே ஐஸை ஒரே நேரத்தில் வைத்து அவர்களை குளிர்வித்தார். .